உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-08-19 09:33 GMT   |   Update On 2023-08-19 09:33 GMT
  • சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு ஒரு மகனும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர்.

பவித்ராவுக்கு வீட்டில் திருமணத்திற்காக வரம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பவித்ரா கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார். இது குறித்த அவர் பெற்றோர் கேட்கும் போது தான் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக பவித்ரா கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பவித்ரா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நிலைமை மோசம் அடைந்ததால் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News