உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடி மாரியம்மனுக்கு கூழ் வைத்து வழிபாடு

Published On 2023-07-29 15:10 IST   |   Update On 2023-07-29 15:10:00 IST
  • கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விநாயகர், பாலமுருகன் மற்றும் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் 500 லிட்டர் கூழ் தயார் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார மகாதீபாரதனை பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கூழ் பிரசாதம் பெற்று சென்றனர்.

Tags:    

Similar News