உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-02-06 06:39 GMT   |   Update On 2023-02-06 06:39 GMT
  • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
  • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

அம்மாபேட்டை

சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News