உள்ளூர் செய்திகள்

பண்ணாரி சோதனை சாவடி அருகே உலாவரும் காட்டு யானைகள்

Published On 2023-09-01 13:37 IST   |   Update On 2023-09-01 13:37:00 IST
  • பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன.
  • லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருகின்றன.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்ப கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட் டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் சத்தி யமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்க ளாக இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வரு கின்றன.

பண்ணாரி சோத னை சாவடி அருகே கர்நாட காவில் இருந்து தமிழக த்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதைப்போல் தமிழகத் தில் இருந்தும் கர்நாடகாவு க்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கரும்பு களை ஏற்றி சென்று வரும் லாரிகளை கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் வழிமறித்து கரும்புகளை தின்று வருவதை தொடர்கதையாகி வருகிறது.

கரும்பு கட்டுடைகளை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் சில நேரம் பாரங்கள் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் உள்ள சாலையோரம் கரும்பு கட்டுகளை தூக்கி வீசி விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் யானைகள் கரும்புகளை தின்று பழக்கப்ப ட்டதால் அதன் காரணமாக தினமும் அந்த பகுதியில் யானைகள் வருகின்றன.

கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளுக்காக யானைகள் காத்திருக்கின்றன. பின்னர் கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருகின்றன.

இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன. கரும்பு கட்டுகளை சாப்பிடுவதற்காக யானைகள் வருகின்றன.

எனவே இரவு நே ங்க ளில் வரும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வே ண்டும். தேவையி ல்லாமல் சாலையில் இறங்கி நடமாட வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல் போனில் படம் எடுக்கக் கூடாது என எச்சரித்தனர்.

Tags:    

Similar News