உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் பரவலாக பெய்த மழை

Published On 2023-09-28 09:14 GMT   |   Update On 2023-09-28 09:14 GMT
  • அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
  • கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேப்போல் பவானிசாகர் அணை, குண்டேரி பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இது தவிர அம்மாபேட்டை சத்தியமங்கலம், கோபி, பவானி, பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

கொடிவேரி-29, பவானி சாகர்-22.80, அம்மா பேட்டை-18, சத்திய மங்கலம்-16, எலந்தகுட்டை மேடு-7, கோபிசெட்டி பாளையம்-5.20, குண்டேரி பள்ளம்-2.40, பவானி-1.40.

Tags:    

Similar News