ஈரோடு மாவட்ட அணைப்பகுதிகளில் பரவலாக மழை
- ஈரோடு மாவட்ட அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
- ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் சுமார் 1 மணி நேர த்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமை யாக உள்ளது. வெயிலால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். வயதான வர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல் சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காண ப்பட்டது. வெயிலால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் சத்திய மங்கலம் பகுதியில் நேற்று மாலை திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. இதை தொட ர்ந்து சிக்கரசம் பாளையம், புளியங்கோம்பை பண்ணாரி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் சுமார் 1 மணி நேர த்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மேலும் திம்பம், ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி முதல் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழையால் வனப்பகுதி முழுவதும் குளி ர்ச்சியாக காணப்பட்டது. இதே போல் டி.என்.பாளையம், கொங்கர் பாளையம், வினோபா நகர் மற்றும் குண்டேரி பள்ளம் அணை பகுதி மற்றும் வனப்பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. மாவட்ட த்தில் அதிக பட்சமாக குண்டேரிபள்ளம் அணைப் பகுதியில் 34.60 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மேலும் கோபிசெட்டி பாளையம், கொடிவேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பரவ லாக மழை பெய்தது.
இதே போல் அம்மாபேட்டை, நெரிஞ்சிபேட்டை, பூத ப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரம் பரவ லாக மழை பெய்தது. இதனால் வெளிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- குண்டேரி பள்ளம் 34.60, கொடிவேரி 12, கோபி 7.20, சத்திய மங்கலம் 5, அம்மாபேட்டை 3.60, வரட்டுபள்ளம் 2.20.