உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்புடன் 250 பேருக்கு சிகிச்சை

Published On 2022-07-13 15:17 IST   |   Update On 2022-07-13 15:17:00 IST
  • சுகாதாரத் துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2 நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 236 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News