உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

Published On 2022-07-28 10:39 GMT   |   Update On 2022-07-28 10:39 GMT
  • ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது.
  • நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய காலங்களில் பயன்படுத்தபட்ட பொருட்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் இன்னும் பல அபூர்வ பொருட்கள் சேகரி க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதனை பொதுமக்கள் தினமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அருங்கா ட்சியகத்தின் காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது:-

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவி களுக்கு உள்விளக்க பயிற்சி கடந்த 27-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் பற்றியும், அதன் முக்கியத்துவம் வரலாறு, பொருட்களை சேகரிக்கும் பழக்கம், நாணயங்கள், தோல் பாவைகள், விலங்கியல் பொருட்கள், கற் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News