உள்ளூர் செய்திகள்

மின் வயர்கள் திருட்டு

Published On 2022-07-30 10:42 GMT   |   Update On 2022-07-30 10:42 GMT
கிணற்றில் பொருத்தபட்டு இருந்த மின்சார வயர்களை மின்சார இணைப்பு உள்ள இடத்தில் இருந்து மின் மோட்டார்களுக்கு செல்லும் மின்சார வயர்களை வெட்டியும், இழுத்தும் அறுத்தும் திருடி சென்றுள்ளார்கள்.

கொடுமுடி:

கொடுமுடி அருகில் கொளத்துப்பாளையம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் இறைத்து பாசனம் செய்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று இரவு கொளத்துப் பாளையத்தை சேர்ந்த கே.எம்.தங்கவேல், கே.எம்.நல்லசாமி, பனப்பாளையம் வக்கீல் சுப்பிரமணி, கரட்டூரை சேர்ந்த கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, புரவி பாளையம் பி .கே , நாச்சிமுத்து ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பொருத்தபட்டு இருந்த மின்சார வயர்களை மின்சார இணைப்பு உள்ள இடத்தில் இருந்து மின் மோட்டார்களுக்கு செல்லும் மின்சார வயர்களை வெட்டியும், இழுத்தும் அறுத்தும் திருடி சென்றுள்ளார்கள். இது குறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 5 விவசாயிகளும் புகார் கொடுத்து உள்ளார்கள்.

Tags:    

Similar News