உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-04-17 12:48 IST   |   Update On 2023-04-17 12:48:00 IST
  • சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
  • சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த குழியூரை சேர்ந்தவர் சேகர்.

இவரும் இவரது மகன் ஹரிஹரனும் அட்டக்கல்லூ ரில் உள்ள மாச நாயக்கர் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த சேகர் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழு ந்தார்.

சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.

சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News