உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68 அடியாக சரிந்தது

Published On 2023-10-11 10:02 GMT   |   Update On 2023-10-11 10:02 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
  • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 68.73 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,734 கனஅடி யாக நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.84 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.95 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News