உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது

Published On 2022-06-07 07:40 GMT   |   Update On 2022-06-07 07:40 GMT
  • அம்மாபேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (35). லாரி டிரைவர்.

இவர் நேற்று மாலை அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தர வேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நாக ராஜை எச்சரித்தனர்.

மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாகராஜ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

தொடர்ந்து நாகராஜ் போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து தாக்கி பேனாவால் குத்தினார். மேலும் அவரின் கை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் ஏட்டு முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

இது குறித்து போலீஸ் ஏட்டு அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News