உள்ளூர் செய்திகள்

வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது

Published On 2023-07-04 10:00 GMT   |   Update On 2023-07-04 10:00 GMT
  • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது
  • சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை

ஈரோடு

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெறு கிறது. குறிப்பாக ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை தொடங்கி விடிய, விடிய நடைபெற்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவ டைகிறது.

இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள். மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

மேலும் ஆன்லைன் மூலமாக வும் ஆர்டர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் ஜவுளி சந்தையில் துணிகளின் விலை குறைவாக விற்கப்படுவதால் இங்கே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஆனி மாதம் பிறந்துள்ளதால் எந்த ஒரு விசேஷமும் இல்லை.

இதனால் ஜவுளி வியா பாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் இன்று அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை.

ஆனால் இன்று மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதைப்போல் உள்ளூர் மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவை வந்திரு ந்தனர். சில்லரை வியாபாரம் 15 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரி வித்தனர். இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

Similar News