உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-31 10:03 GMT   |   Update On 2023-03-31 10:03 GMT
  • சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
  • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 22). கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் ஒரு இளம்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விசாரித்தனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது. அந்த பெண் அவரது கணவருடன் வாழ பிடிக்காமல் சிவகுமா ருடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவகுமார் அந்த பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.

அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது உறவினர்கள் தேடி வந்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News