உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

கேபிள் வயர் திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-02 09:42 GMT   |   Update On 2023-05-02 09:42 GMT
  • மணிகண்டன் என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
  • அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது.

சென்னிமலை:

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஈஸ்வரன் (63) என்பவர் மண்டல பொருப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டவர் அமைத்துள்ளார்.

அதை பராமரிக்க ஜோதிநாத் என்பவரை நியமித்துள்ளார். இதையடுத்து அவர் டவரை பராமரித்து கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டவர் லைன் அமைக்க வைத்திருந்த 20 மீட்டர் கேபிள் வயர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதை யரோ திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஈஸ்வரன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரிதது அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது

இதையடுத்து பெருந்துறை போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News