உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-01-14 07:54 GMT   |   Update On 2023-01-14 07:54 GMT
  • சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.

பு.புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News