உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-12-24 09:56 GMT   |   Update On 2022-12-24 09:56 GMT
  • சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
  • அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

பவானி:

பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News