உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.

ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்

Published On 2023-04-28 09:28 GMT   |   Update On 2023-04-28 09:28 GMT
  • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் கூறி பிரசாரம் செய்யப்பட்டது.
  • அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

ஈரோடு:

ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஈரோடு ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இப்பிரசாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகங்கள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்து கூறியும்,

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக்கூறியும் பிரசாரம் செய்யப்பட்டது.

மேலும் அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பிரச்சாரத்தில் ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News