உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகனுக்கு பூணூல் அணிவித்து சிறப்பு பூஜை

Published On 2023-08-31 09:49 GMT   |   Update On 2023-08-31 09:49 GMT
  • சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் அணிவிக்கப்பட்டது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னிமலை:

ஆவணி அவிட்டம் விழா வினை முன்னிட்டு சென்னி மலை முருகப் பெருமானுக்கு பூணூல் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி பவுர்ணமியினை முன்னிட்டு ஆவணி அவிட்ட விழா கொண்டாடப்பட்டது.

சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர், உட்பட சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபிேஷக பூஜைகளும் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் அனைவரும் காலை 11 மணி அளவில் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணிவித்தனர்.

Tags:    

Similar News