உள்ளூர் செய்திகள்

ரூ.3½ கோடிக்கு பருத்தி விற்பனை

Published On 2022-07-21 09:38 GMT   |   Update On 2022-07-21 09:38 GMT
  • விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
  • தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.

அம்மாப்பேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூர், மற்றும் தருமபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 879-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 919-க்கும் என ஏலம் போனது. மொத்தம் சுமார் 3 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானது.

இதனை ஆந்திர மாநில வியாபாரிகள் மற்றும் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News