உள்ளூர் செய்திகள்

ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

Published On 2023-10-07 09:45 GMT   |   Update On 2023-10-07 09:45 GMT
  • சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.
  • விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.

இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 வரையிலும்,

சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News