உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி ஊழியர் வீட்டில் கொள்ளை- போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-08-28 14:13 IST   |   Update On 2023-08-28 14:13:00 IST
  • இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
  • வீட்டில் உள்ள 43 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கதிர ம்பட்டி அடுத்துள்ள நஞ்ச ப்பாநகரை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் சங்கர் உயிரிழந்த நிலையில் கவிதாவின் மகள் கோவை யில் தங்கியுள்ளார். கவிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் கண க்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா கடந்த 25-ம் தேதி கோவையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மாலை கவிதா மகள் வீட்டிலிருந்து ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்க பட்டு அதில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் கொள்ளையடி க்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை யிலான போலீசார் வந்து தீவிர விசாரணை மேற்கொ ண்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News