உள்ளூர் செய்திகள்
ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெற சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்
- ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெற சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்தார்
- ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:- ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஈரோடு மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் தகுதி உள்ள சாலையோர வியாபா ரிகள், மாநகராட்சி சமு தாய அமைப்பாளர்க ளை ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படும், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவ ணங்களுடன், அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொ லைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.