உள்ளூர் செய்திகள்

சொத்து வரியை 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்

Published On 2023-04-21 09:31 GMT   |   Update On 2023-04-21 09:31 GMT
  • சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
  • 5 சதவீத ஊக்கத்தொகையினை பெற்று பயன்பெறலாம்.

பவானி:

பவானி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமை யாளர்கள் தங்களது 2023- 2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன் படி பவானி நகராட்சி சார்பில் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வசூல் மையத்தில் காசோலை, வங்கி வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பவானி நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்க தொகை யினை பெற்று பயன்பெறலாம்.

இதன் மூலம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்ப டும் வளர்ச்சி திட்ட பணிகளில் தங்கள் பங்களி ப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News