உள்ளூர் செய்திகள்

தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-01-04 10:33 GMT   |   Update On 2023-01-04 10:33 GMT
  • நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
  • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று காலையில் விஜயா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

அப்போது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News