உள்ளூர் செய்திகள்
- விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பெருந்துறை:
விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம்,
கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.