உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் பங்க் கேஷியர் வாய்க்காலில் விழுந்து தற்கொலை

Published On 2023-09-22 09:55 GMT   |   Update On 2023-09-22 09:55 GMT
  • வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பரமே ஸ்வரன் (வயது 44). இவருக்கு திருமணமாகவில்லை.

பரமேஸ்வரன் இவரது தாயார் சாந்தாவுடன் (74) வசித்து வந்தார். பரமே ஸ்வரனின் சகோதரி காவே ரி (46) தனது கணவ ருடன் சென்னையில் வசி த்து வருகிறார்.

பவானி ரோடு மாயபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பரமேஸ்வரன் கேஷியராக பணியாற்றி வந்தார்.

பரமேஸ்வரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரமேஸ்வரன் வழக்கம்போல வேலைக்கு செல்வதாக தனது தாயா ரிடம் கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பெட்ரோல் பங்குக்கு சென்ற பரமே ஷ்வரன் தனக்கு மன அழுத்தம் காரணமாக நான் நாளை வேலைக்கு வருகி றேன் உன கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் காலிங்க ராயன் வாய்க்கால் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது செல்போன், ஏ.டி.எம். கார்டு, கண்ணாடி, வண்டி யின் சாவி ஆகியவற்றை வண்டி பெட்டியில் வைத்து விட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரமே ஸ்வரன் சகோதரி காவே ரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவேரி அளி த்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News