உள்ளூர் செய்திகள்

செயற்கை நிற பொடிகள் பயன்படுத்திய ஓட்டலுக்கு அபராதம்

Published On 2023-10-10 15:18 IST   |   Update On 2023-10-10 15:18:00 IST
  • பேக்கரி கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • 2 கடைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நம்பியூர்:

நம்பியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட குருமந்தூர், நடுப்பாளையம், குருமந்தூர் மேடு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலு வலர் குழந்தைவேல் தலை மையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது குருமந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அசைவ உணவு தயாரிக்க செயற்கை நிறமி பொடிகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அதிகாரிகள் அந்த செய ற்கை நிற பொடிகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்ப ட்டது. இதேபோல் குருமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் அதிகாரி கள் சோதனை செய்தனர்.

அப்போது தேதி குறிப்பிடாமல் உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து தேதி குறி ப்பிடாமல் வைக்கப்பட்டி ருந்த உணவு பொருட்ளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

மேலும் உணவகங்களில் செயற்கை நிற பொடிகள் மற்றும் உணவு கெட்டுப் போகாமல் இருக்க அஜின மோட்ட போன்றவைகள் பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள்அறிவுறுத்தி எச்சரித்தனர்.

மேலும் அந்த 2 கடைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, உணவு பாது காப்பு விதிமுறை களை மீறு வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு ள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News