உள்ளூர் செய்திகள்

மூதாட்டி விஷ மாத்திரை தின்று தற்கொலை

Published On 2023-06-13 10:06 GMT   |   Update On 2023-06-13 10:06 GMT
  • வயிற்று வலி தாங்க முடியாமல் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
  • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர், ராமலிங்கம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தன பாரதி (32). இவரது அத்தை இந்திராணி (71). கடந்த 2 வருடமாக இந்திராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சந்தனபாரதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்திராணி ஏதேதோ கூறிக்கொண்டு முனகி கொண்டிருந்தார்.

அவரது அருகே சென்று பார்த்த போது அவர் மீது விஷ வாடை அடித்ததால் சந்தேகப்பட்டு சந்தைபாரதி அவரிடம் கேட்டபோது வயிற்று வலி தாங்க முடியாமல் மஞ்சள் மூட்டைக்காக வாங்கி வைத்திருந்த சல்பாஸ் (விஷம்) மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது உடல நிலை மோசமானதால் இந்தி ராணியை காப்பாற்ற இயலாது. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டனர்.

இதனையடுத்து மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் இந்திராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News