உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-04 09:53 GMT   |   Update On 2023-10-04 09:53 GMT
  • வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு:

பீகார் மாநிலம் நானேய்யா கிழக்கு பாகாட்டியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பஸ்வான் (22). இவர் காஞ்சிக்கோயில் அருகே உள்ள எருக்காட்டு வலசு பகுதியில் உள்ள மஞ்சள் தூள் தயாரிக்கும் மில்லில் பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இரவு அவரது மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றவர் மில்லின் மதில் சுவர் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிக்கோவில் போலீசார் ரமேஷ் பஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News