உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது

Published On 2022-12-12 10:31 GMT   |   Update On 2022-12-12 10:31 GMT
  • மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
  • கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது

புளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி முத்து விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (36). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

இவர் சம்பவத்தன்று டானா புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் டீ குடிக்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்குள் சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதி அம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் சந்த கடை பகுதி அருகே புளியம்பட்டி போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.

அவரை விசாரித்ததில் அவர் அந்தியூர் அடுத்த செம்புளி ச்சாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News