உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் மண்சரிவு

Published On 2022-11-13 15:03 IST   |   Update On 2022-11-13 15:03:00 IST
  • சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
  • இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை

சென்னிமலை:

சென்னிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் அளவு சென்னிமலையில் மழை பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.

இது குறித்து அறிந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து பொக்லைலன் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் மண்சரிவு கற்களை அகற்றினர்.

இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சரிந்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News