உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2023-10-09 08:41 GMT   |   Update On 2023-10-09 08:44 GMT
  • பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
  • அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது

ஈரோடு,

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.24 அடியாக சரிந்து உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 536 கனஅடியாக நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விட ப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 600 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.94 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடி யாகவும் உள்ளது.

Tags:    

Similar News