உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2023-09-09 11:09 GMT   |   Update On 2023-09-09 11:09 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
  • அணைக்கு வினாடி 1,311 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வரு வதால் அணையின் நீர்ம ட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,311 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம்

அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.76 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News