உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

Published On 2023-09-24 09:30 GMT   |   Update On 2023-09-24 09:30 GMT
  • இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், அற ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதி ப்பிலான மோட்டார் சைக்கி ளை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வாங்கினார்.

இதை தொடர்ந்து 4 நாள்களிலேயே அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜீனில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரி சங்கர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு சென்றார்.

தொடர்ந்து அவர் அந்த விற்பனை நிலையத்தில் அந்த மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக வேறு மோட்டார் சைக்கிளை மாற்றி தருமாறு நேற்று இரவு கேட்டதாக தெரிகிறது.

ஆனால் ஷோரூம் ஊழியர்களோ மோட்டார் சைக்கி ளில் ஏற்பட்டபழுதை சரிசெய்து தருவதாக மட்டும் கூறி உள்ளனர். இதனால் கவுரி சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

வாங்கிய 4 நாட்களிலேயே மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் அதே மாதிரியான வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், அப்பகுதியினரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

Tags:    

Similar News