உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை போலீசார் நேரடியாக சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கின்றனர்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2023-07-30 09:13 GMT   |   Update On 2023-07-30 09:13 GMT
  • ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது.
  • இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்தது.

இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் கட ந்த 2019-ம் ஆண்டு 'ஹலோ சீனியர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதற்கென 9655888100 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தனியாக வசிக்கும் முதியவ ர்களை பாது காக்கவும், அவர்களுக்கு உள்ள இடையூறுகளை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் எவ்வித பாதுகாப்பு வசதி யும் இன்றி தனியாக வசிக்கும் முதியோர் வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்ப ட்ட போலீஸ் நிலை யத்தில் பணி யாற்றும் போலீசார் மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

வாரத்தில் 2 நாட்கள் அவர்களது வீடுகளுக்கு போலீசார் நேரடி யாக சென்று அவ ர்களிடம் நலம் விசாரித்து விட்டு அவர்க ளிடம் குறைகள் இருந்தால் கேட்டு அதனை நிவர்த்தி செய்கின்றனர்.

தனியாக வசிக்கும் முதியவர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த அறிவுறுத்தினோம். அதன்படி தற்போது 30 வீடுகளில் கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.

ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணில் அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனுக்கு டன் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News