உள்ளூர் செய்திகள்

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-26 07:44 GMT   |   Update On 2022-06-26 07:44 GMT
  • கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் சர்க்கரைபாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் ஜோதி (70).

இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு ஜோதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News