கரும்பு லாரிகளை சிறை பிடித்து விவசாயிகள் போராட்டம்
- கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்புகளை பயிரிட்டு உள்ளனர்.
இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை க்கு கொண்டு செல்லப்ப டுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்ய ப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டு க்கூலி ரூ.480 மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே கர்நாடகா மாநிலத்தை போல் கரும்பு வெட்டுக்கூலியை குறைக்க வேண்டும் உள்பட கோரி க்கைகளை வலியுறுத்தி தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த லாரி உரிமை யாளர்கள் மற்றும் போலீ சார் உங்களது கோரிக்கை கள் சம்பந்தமாக ஆலை நிர்வாகம் மற்றும் சம்பந்த ப்பட்ட அரசு அதிகாரி களிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். லாரிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தினர்.
இதையடுத்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சோதனைசாவடி பகுதிக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கரும்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்ட ங்களில் கரும்பு வெட்ட டன் ஒன்றுக்கு கூலி ரூ.750 நிர்ணயத்துள்ள நிலையில் தாளவாடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக கரும்பு வெட்டு க்கூலியை ஆலை நிர்வாக த்திற்கு தெரியாமல் நிர்ண யித்து வசூலிப்பதாகவும், இதனால் தங்களுக்கு மிகு ந்த நஷ்டம் ஏற்படுவதாகும் அவர்களிடம் தெரிவித்த னர்.
இதையடுத்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் ஆலை நிர்ணத்துள்ள வெட்டு க்கூலி மட்டும் ஆலை தரப்பில் பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம். இதுபோ ன்று நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது ஆலை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என விவசாயி களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.