என் மலர்
நீங்கள் தேடியது "Farmers protest by"
- கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்புகளை பயிரிட்டு உள்ளனர்.
இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை க்கு கொண்டு செல்லப்ப டுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்ய ப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டு க்கூலி ரூ.480 மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே கர்நாடகா மாநிலத்தை போல் கரும்பு வெட்டுக்கூலியை குறைக்க வேண்டும் உள்பட கோரி க்கைகளை வலியுறுத்தி தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த லாரி உரிமை யாளர்கள் மற்றும் போலீ சார் உங்களது கோரிக்கை கள் சம்பந்தமாக ஆலை நிர்வாகம் மற்றும் சம்பந்த ப்பட்ட அரசு அதிகாரி களிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். லாரிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தினர்.
இதையடுத்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சோதனைசாவடி பகுதிக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கரும்பு விவசாயிகள் தங்களது விவசாயத் தோட்ட ங்களில் கரும்பு வெட்ட டன் ஒன்றுக்கு கூலி ரூ.750 நிர்ணயத்துள்ள நிலையில் தாளவாடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக கரும்பு வெட்டு க்கூலியை ஆலை நிர்வாக த்திற்கு தெரியாமல் நிர்ண யித்து வசூலிப்பதாகவும், இதனால் தங்களுக்கு மிகு ந்த நஷ்டம் ஏற்படுவதாகும் அவர்களிடம் தெரிவித்த னர்.
இதையடுத்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் ஆலை நிர்ணத்துள்ள வெட்டு க்கூலி மட்டும் ஆலை தரப்பில் பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே விவசாயிகளிடம் ஊழியர்கள் கூடுதலாக வெட்டுக் கூலி தர வேண்டாம். இதுபோ ன்று நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது ஆலை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என விவசாயி களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
- விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டிபா ளையத்தில் உள்ள நீர்வ ளத்துறை செயற்பொ றியாளர் அலுவ லகத்திற்கு இன்று காலை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க த்தை சேர்ந்த ஒருங்கிணை ப்பாளர் ரவி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவும், அதற்கான அரசாணையை உட னடியாக வெளியிடவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சீரமைப்பு திட்டத்தை கைவிடவும், அதற்கான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்போது நடை பெற்று வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும்,
விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். காலிங்கராயன், தடபள்ளி-அரக்கன் கோட்டை, கீழ்பவானி கால்வாய்களில் ஒரே சமயத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்ப தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கீழ்பவானி பாசன பகுதி களான ஈரோடு, திருப்பூர், கரூர் மாவ ட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கால்நடைகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் ஆற்றல் அசோ க்குமார் உள்பட பல்வேறு விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






