- தாளவாடி அடுத்த திகினாரை சோறைக்காடு ரங்கசாமி கோவில் வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர் கண்ணையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் ஏராளமாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தாளவாடி:
தாளவாடி அடுத்த திகினாரை சோறைக்காடு ரங்கசாமி கோவில் வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர் கண்ணையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜுர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
அதே போல கடந்த 6 மாதத்தில் 2 மனிதர்கள் யானைத் தாக்கி பலியாகி உள்ளனர் . ஆனால் இறந்த நபர்களுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்படுவதாகவும் ,அதே போல் சிறுத்தை, புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு சில நேரங்களில் இழப்பீடு வழங்கப்படுவது இல்லை எனவும் சில நேரங்களில் குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்படிவதாகவும் அதை உயர்த்தி வழங்க கோரியம், தற்போது ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை,ஏரகனள்ளி, ஜோரக்காடு கரளவாடி பகுதியில் அந்த ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதாகவும் வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் வனப்பகுதியைச் சுற்றி அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்காமல் பெயரளக்கு மட்டுமே அகழி அமைத்துள்ளதாகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஒன்றிணைந்து தாளவாடியில் விரைவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது