உள்ளூர் செய்திகள்

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-07-20 09:21 GMT   |   Update On 2023-07-20 09:21 GMT
  • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News