உள்ளூர் செய்திகள்

ரூ.45 லட்சத்து 8 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2022-10-11 07:53 GMT   |   Update On 2022-10-11 07:53 GMT
  • மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
  • மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 72 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 7 காசுக்கும், சராசரி விலையாக 79 ரூபாய் 97 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 54 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News