உள்ளூர் செய்திகள்

தேங்காய் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-09-30 09:25 GMT   |   Update On 2023-09-30 09:25 GMT
  • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News