உள்ளூர் செய்திகள்
எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
- எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுக்கு விற்பனையானது
மொடக்குறிச்சி,
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 489 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 869 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ25.65 காசுகள், சராசரி விலையாக 25.25 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகின.