உள்ளூர் செய்திகள்

எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

Published On 2023-10-02 09:33 GMT   |   Update On 2023-10-02 09:33 GMT
  • எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
  • விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்

மொடக்குறிச்சி.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.09-க்கும், சராசரி விலையாக ரூ.24.17 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 340-க்கு விற்பனையாகின.

Tags:    

Similar News