உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2023-09-06 14:53 IST   |   Update On 2023-09-06 14:53:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது
  • அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்தனர்

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசுவ ராஜப்பா தோட்டம் பகுதி யில் தாளவாடி போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் ரத்தி னம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது கரலபாடி- மெட்டல் வாடி ரோட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சிவபதா (வயது 30), சுப்பிரமணி (50), மகேஷ் (50), மற்றொரு மகேஷ் (37), குருசாமி, சுப்பண்ணா, பிரகாஷ் உள்பட 8 பேர் என தெரிய வந்தது.அவர்களிடமிருந்து போலீ சார் சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரத்து 620 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து தாளவாடி போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News