உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்துக்கு விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

Published On 2022-08-16 10:14 GMT   |   Update On 2022-08-16 10:14 GMT
  • ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
  • 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு:

சுதந்திர தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின மான நேற்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்ப டுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்கப்படுகிறதா? என பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வானது ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் நடத்தப்பட்டது.

இதில் 88 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள ர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மாற்று விடுப்பு வழங்காமலும் விடுமுறை நாளில் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் பட்டியலை 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமலும் அதன் நகலை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது.

உடனடியாக சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News