- மதுவிற்ற 7 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யபட்டன
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெரு ந்துறை, ஈரோடு டவுன், ஆசனூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இன்றி மது விற்று கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பகுதி யைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணன் (வயது 38), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டை தங்கராசு மகன் பாரதி (24), கர்நாட காவைச் சேர்ந்த லிங்க ராஜூ (32), திருப்பூர் மாவ ட்டம் பல்லடத்தை சேர்ந்த பாபு மகன் ஜெயக்குமார் (34), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோ (21) ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவ ர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் தீனாரை பகுதியில் மது கடத்திய தாளவாடி பகுதியைச் சேர்ந்த கோபாலகிரு ஷ்ணன் 51 சித்தராஜ் 44 ஆகியோரை தாளவாடி போலீசார் பிடித்தனர். மேலும் அவ ர்கள் மது கடத்த பயன்ப டுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களை பறிமுதல் செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.