உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-09-03 07:10 GMT   |   Update On 2023-09-03 07:10 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது.
  • அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்க ளாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வந்தது. ஆனால் மழை பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 266 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

அணையில் இரு ந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.55 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.42 கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News