உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-06-17 08:03 GMT   |   Update On 2023-06-17 08:03 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.76 அடியாக உள்ளது.
  • அணைக்கு வினாடிக்கு 432 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் கடந்த 3 நாட்களாக பவானிசாகர் அணைக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 432 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.21 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.28 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News